Friday, March 20, 2009
இன்றைய (மார்ச் 21-ம் தேதி) தலைப்புச் செய்திகள்
தேர்தல் விதி மீறலை வீடியோ எடுக்க தனி குழு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைமீறலை வீடியோ மூலம் படம்பிடிக்க தனி குழு அமைக்க தேர்தல் அதிகாரி உத்தரவு.
தி.மு.க.வினருக்கு கருணாநிதி அறிவுரை
தவறுசெய்பவர்கள் யாராக இருந்தாலும் அறவழிநின்று அவர்களை
தண்டிப்பேன் என்று தி.மு.க.வினருக்கு கருணாநிதி அறிவுரை.
காங்கிரசுடன் தே.மு.தி.க. தொகுதி உடன்பாடு? காங்கிரஸ்கட்சியுடன் தே.மு.தி.க. தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.
4-வது திருமணத்துக்கு முயன்ற பேராசிரியர் கைது
சென்னையில் 3 பெண்களைமணந்து ஏமாற்றிய மோசடி கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். பரபரப்பு வாக்குமூலம்.
வருண்காந்தியை கைது செய்ய கோர்ட்டு தடை வருண்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் போலீசார் கைது செய்யாமலிருக்க, டெல்லி ஐகோர்ட்டு முன்ஜாமீன் அளித்தது.
தேர்தல் கமிஷனின் கருத்தை ஏற்க மத்திய அரசு மறுப்பு உள்துறை செயலாளரின் பதவி காலம் நீடிப்பு பிரச்சினையில் சிக்கல் மேல் சிக்கல்: மேனகா காந்திக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு
பாராளுமன்ற தேர்தலில் ``அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பாடுபடுங்கள்'' சிறு கட்சி தலைவர்களை அழைத்து ஜெயலலிதா வலியுறுத்தல்
ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா: ஜனாதிபதி பிரதீபா பட்டீல் சென்னை வந்தார் கவர்னர், அமைச்சர்கள் வரவேற்றனர்
"அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்'' விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
செல்போன் பேச்சு மூலம் குட்டு உடைந்தது செல்போன் பேச்சால்தான் குமாரின் குட்டு உடைந்தது
வக்கீல்கள் போராட்டத்தின் போது சோனியா உருவப்படத்தை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கே.வி.தங்கபாலு வலியுறுத்தல்
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு
நடிகை அசின் உதவியாளரை கண்டு பிடிக்க தனிப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் அமைக்கப்பட்டது
பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் ஏப்ரல் 2-ந் தேதிக்கு தள்ளிவைப்பு அன்பழகன் அறிவிப்பு
முதல்முறையாக ஜெயில்களில் கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி தமிழக அரசு உத்தரவு
ஐகோர்ட்டு சம்பவத்தில் போலீஸ் அத்துமீறல் நடந்துள்ளதா? ஒருநபர் குழுவின் முதல்கட்ட விசாரணை 24, 26 தேதிகளில் நடக்கிறது தமிழக அரசு அறிவிப்பு
கூடங்குளத்தில் பயங்கரம் ஜோதிட நிலையத்தில் வாலிபர் தலை துண்டித்து கொலை உடலுக்கு தீ வைப்பு
கடலூர் மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவியதாக பரபரப்பு தகவல் கடலில் படகில் சென்று போலீசார் தேடுகிறார்கள்
ரூ.31 ஆயிரம் கோடியில் 5900 மெகாவாட் மின் உற்பத்தி திட்ட வேலைகள் நடக்கின்றன மின்வாரியம் விளக்கம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மோதல் மாணவர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து
கிண்டல் செய்வது போல் அமைந்துவிடக்கூடாது என்பதால் ``எம்.ஜி.ஆர். போல் நடனம் ஆட மறுத்து விட்டேன்'' சினிமா பட விழாவில், விஜயகாந்த் பேச்சு
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்உற்பத்தி திறன் 10,011 மெகாவாட் தற்போது மின் உற்பத்தி திறன் குறைவதற்கு காரணம் என்ன? அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
கள் இறக்க அனுமதி கோரி டெல்லியில் நாடார் பேரவையினர் உண்ணாவிரதம்
இந்த ஆண்டு இறுதியில் தொடக்கம் இந்தியா-சான்பிரான்சிஸ்கோ இடையே நேரடி விமான சேவை ஏர்-இந்தியா விமான அதிகாரி வர்கீஸ் தகவல்
உளூந்தூர்பேட்டையில் ரெயில் முன்பாய்ந்து பலியானவர்கள் சென்னை காதல் ஜோடி திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்
சென்னை பரங்கிமலையில் பயிற்சி ராணுவ அதிகாரிகள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சி ஜனாதிபதி முன்னிலையில் இன்று பொறுப்பு ஏற்கிறார்கள்
இயக்குனர் சீமான் ஜாமீனில் வர மறுப்பு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு
பணவீக்கம் குறைவு, விளைச்சல் அதிகரிப்பு எதிரொலி அனைத்து மளிகை பொருட்களும் கிடுகிடு சரிவு குண்டு மிளகாய் வத்தல் கிலோவுக்கு ரூ.20 குறைந்தது
கேரளா ஓவியர் வரைந்த அன்னை தெரசா ஓவியத்திற்கு ரூ.1 1/2 கோடி அன்பளிப்பு "பணத்தை என்ன செய்வதென்று திகைத்து நிற்கிறார்''
சென்னையில் மலேசிய தமிழ் இலக்கிய ஆசிரியர்களுக்கு வரவேற்பு கவிஞர் வைரமுத்து பங்கேற்பு
வெடிகுண்டு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்ய முடியாது ஐகோர்ட்டு தீர்ப்பு
உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார், மாயாவதி இன்று, கேரளாவில் பிரசாரம் தொடங்குகிறார்
வருண்காந்தி விவகாரம்: முக்கிய தலைவர்களின் பேச்சு வீடியோவில் பதிவு தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு
பிரதமர் ஆவதற்கு எல்லா தகுதியும் ராகுல் காந்தியிடம் உள்ளது டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித் பேட்டி
முன்னாள் முதல்-மந்திரி மகனுக்கு `சீட்' மறுப்பு: அத்வானி வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
சிரஞ்சீவி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ரெயில் சின்னத்தை எங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
கருத்துகளில் கட்சிக்கு உடன்பாடு இல்லை: வருண்காந்தியின் பேச்சுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல தேர்தல் கமிஷன் நோட்டீசுக்கு பா.ஜனதா பதில்
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மீது செருப்பு வீசிய பெண் 3 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது
அரசியலில் மதத்தை கலந்து மக்களை பா.ஜனதா பிளவுபடுத்தி வருகிறது ஜெயந்தி நடராஜன் குற்றச்சாட்டு
4 தொகுதிகளில் மனுதாக்கல்: ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை முடிந்தது
சுப்ரீம் கோர்ட்டில் நவீன் சாவ்லாவுக்கு எதிரான மனு தள்ளுபடி
இந்தியாவில் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க மாட்டோம் சிவசேனா கண்டிப்பு
3-வது அணியின் பிரதமர் வேட்பாளரை தேர்தல் முடிந்த பிறகு முடிவு செய்வோம் தேவேகவுடா பேட்டி
இதுதான் எனது கடைசி தேர்தல் பிரணாப் முகர்ஜி உருக்கமான பிரசாரம்
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜெயிலுக்குள் கைதிகள் துப்பாக்கி சண்டை: 2 பேர் சாவு
மத்திய அமெரிக்காவில் ஈகுவேடார் நாட்டில் அமெரிக்க தூதரின் வீடு மீது போர் விமானம் மோதியதில் 7 பேர் பலி
2 அமெரிக்க கடற்படை கப்பல்கள் நேருக்கு நேர் மோதல் 95 ஆயிரம் லிட்டர் டீசல் கடலில் கொட்டியது
இலங்கை தமிழர் பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதியுங்கள் சீனாவுக்கு, விடுதலைப்புலிகள் கோரிக்கை
பாகிஸ்தானில் தலீபான்கள் ராக்கெட் வீசி தாக்கியதில் 8 பேர் பலி
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய 4 கம்பெனிகள் மீது நடவடிக்கை சிங்கப்பூர் அரசு எடுத்தது
பாகிஸ்தானில் சர்தாரியின் அதிகாரத்தை பறிக்க பிரதமர் கிலானி உறுதி
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் ஒபாமா அறிவிப்பு
Labels:
அசின்,
கருணாநிதி,
தேர்தல்,
வருண்காந்தி,
விடுதலைப்புலிகள்
Subscribe to:
Posts (Atom)