Thursday, January 1, 2009
அசாமில் பயங்கர குண்டுவெடிப்பு : 3 பேர் பலி : பலர் படுகாயம்!.
கவுகாத்தி :
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியின் மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் பலியாகினர். 31 ஆக உயர்ந்துள்ளது.
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியின் பிருபாரி, பூத்நாத் மற்றும் பிக்பஜார்பகுதிகளில் இன்று பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். 31 பேர் படுகாயமடைந்தனர்.
பூத்நாத் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் காயமடைந்துள்ளனர். பிருபாரி பகுதி நகராட்சி குப்பைக்கூடையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றபின் முதன்முறையாக அசாம் மாநிலத்தில் சிதம்பரம் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உல்பா தீவிரவாதிகள் இக்குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment