Tuesday, January 20, 2009

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ப்பு!.




வாஷிங்டன்:

எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா நண்பனாக இருக்கும் என பதவியேற்றதும் மக்களுக்கு ஆற்றிய உரையில் ஒபாமா பேசும் போது குறிப்பட்டார்.

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள தேசிய அரங்கில் கோலாகலமாக துவங்கியது. விழாவை பிரபல குரு ஒருவர் பிரார்த்தனையுடன் துவக்கி வைத்தார். தொடர்ந்து சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சி நடக்கும் போது பொதுமக்களும் இணைந்து பாடினர்.

தொடர்ந்து அவர் பேசுகையில் நாட்டில் பொருளாதார நிலைமை பெரும் சரிவில் இருக்கிறது. நாட்டு முன்னேற்றத்திற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இத்தனை நாளாக அதிபராக இருந்த புஷ் நாட்டின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவர் தியாகம் போற்றத்தக்கது. அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். அமெரிக்காவை பொறுத்தவரை உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நண்பன் . துணையாக இருப்போம். என்றார் அதிபர் ஒபாமா.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றார். அவருக்கு நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து மக்களிடம் பேசினார். அப்போது அவர் , முன்னாள் அதிபர் புஷ் நாட்டுக்காக பெரும் தியாகம் செய்துள்ளார். என்றார். முன்னதாக துணை அதிபராக ஜோ பிடன் பதவியேற்றார். அவருக்கு நீதிபதி ஜான்பால் ஸ்டிவன்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பைபிள் மீது கை வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பதவியேற்பு விழா நடக்கும் மேடைக்கு இந்திய நேரப்படி (இரவு 10. 15 மணிக்கு) வந்தார். இவரது முன்னும் பின்னும் மூத்த அதிகாரிகளும் , பாதுகாப்பு துறை மூத்த அதிகாரிகளும் வந்தனர். இவர் வந்தபோது குழுமியிருந்த மக்கள் ஆரவார கரகோஷம் எழுப்பினர். உற்சாகம் பொங்கி எழுந்ததை காண முடிந்தது.

அமெரிக் துணை அதிபராக ஜோ பிடன் பதவியேற்றார். அவருக்கு நீதிபதி ஜான்பால் ஸ்டிவன்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பைபிள் மீது கை வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

No comments: