Saturday, January 24, 2009

விடுதலைப்புலிகள் பதிலடி: 1500 ராணுவத்தினர் பலி!. முல்லைத் தீவில் பாசன குளம் புலிகளால் தகர்ப்பு!.





கொழும்பு:

இலங்கை ராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருவதால், அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில், களமடுகுளம் என்ற ஒரு பெரிய பாசனக் குளத்தை புலிகள் தகர்த்தனர். இதில் இலங்கை ராணுவ வீரர்கள் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


இந்த குளம் உடைப்பு தொடர்பாக இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளில், குளம் உடைந்து தண்ணீர் வெளியேறுவதும் அதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதும் தெரிய வந்துள்‌ளது. இதுவரை 500 இலங்கை ராணுவத்தினரின் சடலங்களை மீட்டிருப்பதாக புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: முல்லைத் தீவின் தென்பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பில் புலிகளின் மேலும் இரண்டு முகாம்களை ராணுவத்தினர் கைப்பற்றினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த இரண்டு முகாம்களிலும் தங்குவதற்கு ஏற்ற வகையிலான சொகுசான வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் இருந்ததால், புலிகளின் முக்கியத் தலைவர்கள் சிலர் இங்கு தங்கியிருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ராணுவத்தினர் முன்னேறி வருவதை தடுக்கும் வகையில், கல்மாடுகுளம் என்ற பாசனக் குளத்தையும் நேற்று காலை புலிகள் வெடிவைத்து தகர்த்தனர். இதனால், அப்பகுதியில் 5 சதுர கி.மீ., அளவுக்கு தண்ணீர் பரவியுள்ளது. இவ்வாறு ராணுவ அதிகாரி கூறினார்.

இதற்கிடையில், மக்கள் தஞ்சம் அடைந்துள்ள பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் நேற்று நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியானதாகவும் 20 பேர் காயம் அடைந்ததாகவும், கடந்த மூன்று நாட்களில் 50 பேர் பலியானதாகவும், 100 பேர் காயம் அடைந்ததாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: