Thursday, January 1, 2009

சென்னையில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் மாநாட்டிற்கு இமெயில் மிரட்டல் !.


சென்னை:
சென்னையில்பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு இமெயில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

சென்னையில் வரும் 7ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உள்ளிட்ட தலைவர்களும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் இம்மாநாட்டை சீர்குலைக்க டெக்கான் முஜாகீதின் என்ற பயங்கரவாத அமைப்பு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த இ-மெயில் சவுதி அரேபியாவிலிருந்து வந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இ-மெயில் மிரட்டலையடுத்து பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மிரட்டல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக டி.ஜி.பி., ஜெயின் தெரிவித்துள்ளார்

No comments: