Friday, November 21, 2008

மதகுருவின் இறுதிச்சடங்கு நடந்தபோது பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் 10 பேர் பலி.


இஸ்லாமாபாத், நவ.22-
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள டேரா இஸ்மாயில் கான் நகரில் குண்டு வெடித்ததில் 10 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நகரம் மதமோதல்களுக்கு பெயர் போன ஒன்று ஆகும். ஷியா முஸ்லிம்களுக்கும், சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு ஷியா மதகுரு பலியானார். அவரது இறுதி சடங்கு நேற்று நடந்தது. அப்போது ஒரு குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடித்ததால் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த சிலர் ஆஸ்பத்திரி பகுதியில் துப்பாக்கியால் சுட்டனர். இதை பார்த்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினார்கள்.
அல்கொய்தா தலீபான் தீவிரவாதிகள் சன்னி முஸ்லிம்கள் ஆவார்கள்.

No comments: