
முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. வருகிற 4-ந்தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து, இலங்கையில் போரை நிறுத்தும்படி வற்புறுத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னை, நவ.26-
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் போரை நடத்துவதாக கூறி தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்.
இலங்கையில் போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க, சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம், காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடிந்தது.
இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய னியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
கூட்டத்தின் முடிவில், தமிழகத்தின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வருகிற 28-ந் தேதி பிரதமரை சந்தித்து இது பற்றி முறையிடுவது என்றும், அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில், சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள், பிரதமரை சந்திப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்திட, அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், 50 லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், இந்திய பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசை போர் நிறுத்தத்துக்கு இணங்க வைத்து, தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரே குரலாக இல்லாவிட்டாலும் தங்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தனித்தனியாகவும், ஒரு சிலர் இணைந்தும் போர்க் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து 23-4-2008-லும், 12-11-2008-லும், இரண்டு முறை தமிழ்நாடு சட்டப் பேரவையிலே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு முறையாக அனுப்பிவைத்திருக்கின்றோம். 14-10-2008 அன்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம்.
இதுவரை எங்கும் நடைபெறாத அளவுக்கு 24-10-2008-ல் வரலாறு காணாத மனிதச்சங்கிலி ஒன்றினை நடத்திக் காட்டியிருக்கின்றோம். தமிழகத்திலே உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும்- அரசியல் சார்பற்ற அமைப்புகளும் - ஆர்ப்பாட்டங்களையும், மறியல்களையும், ரெயில் நிறுத்தம் போன்ற போராட்டங்களையும் செய்து தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கின்றன.
திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், சின்னத் திரையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே பேரணி நடத்தி, உண்ணாவிரதம் நடத்தி இலங்கை தமிழரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார்கள்.
வாழ்வாதாரம் தேடி கடலுக்கு மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களின் துயரம் களையப்பட வேண்டுமென்றும், அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் செல்வது தவிர்க்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவதியுறும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பாகவும் நிவாரண உதவிகள் அனுப்புவதற்காக நிதி உதவி கோரி, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, விடுத்த வேண்டுகோளையேற்று இதுவரை 37 கோடி ரூபாய்க்கு மேல் நிதி, ஒரு மாதக் காலத்துக்குள்ளாகவே சேர்ந்துள்ளது.
நாம் எடுத்த இந்த முயற்சிகளின் பயனாகவும், மத்திய அரசு எடுத்துக் கொண்ட அக்கறையின் காரணமாகவும், போரினால் வீடு, வாசல்களை இழந்து சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு இடர் உதவிப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்க அமைப்புகளின் மூலமாகவும், இலங்கையிலே உள்ள இந்திய தூதுவர் வழியாகவும் நம்மால் அனுப்பி வைக்க முடிந்திருக்கின்றது. அதுபோலவே மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களை சுடக் கூடாது என்று உடன்பாடு காண முடிந்துள்ளது.
எனினும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும், உலகத் தமிழர்களும் நாளும் விரும்புகின்ற போர் நிறுத்தம் இலங்கையிலே இதுவரையிலே கைகூடவில்லை. நாம் கேட்டுக் கொண்டவாறு, போர் நிறுத்தம் செய்வதற்குத் தயார் என்று ஒரு தரப்பினர் அறிவித்த பிறகும், இலங்கை அரசு போரை நிறுத்த மாட்டேன் என்று அடம் பிடிப்பதோடு, இரண்டொரு நாட்களில் இலங்கை தமிழர்களையெல்லாம் கொன்றொழிப்பேன் என்று கண்ணை மூடிக் கொண்டு வெறித்தாக்குதல் நடத்தும் செய்தி அன்றாடம் ஏடுகளில் வந்து கொண்டிருக்கின்றது.
இலங்கை தமிழர்கள் பெரும்பகுதியினராக வாழ்கின்ற பகுதிகளை முற்றிலுமாகப் பிடிக்கும் வரை போரை நிறுத்தமாட்டோம் என்று இலங்கை சிங்கள அரசு தொடர்ந்து நடத்தி வரும் போரில்- பெருமளவில் அப்பாவித் தமிழர்களும், அவர்தம் குழந்தைகளும்தான் கொல்லப்படுகிறார்கள் என்றும், பெரும்பாலானோர் அகதிகளாக்கப்பட்டு அல்லல்படுகிறார்கள் என்றும் துயரச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பள்ளிகளுக்குச் செல்லும் வயதுடைய பல்லாயிரக்கணக்கான தமிழ் சிறார்கள் பல மாதங்களாக கல்விக் கூடங்களுக்கே செல்ல முடியாத நிலையில் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் தஞ்சம் புகுந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாலே போதுமென்று திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகள் நம்மைப் பொறுமையாக இருக்கவிடாத நிலையில் இனி என்ன செய்வதென்று யோசித்ததில்- மத்திய அரசு, இலங்கை அரசுடன் மேலும் மேலும் வேண்டுகோள் என்ற அளவில் நில்லாது, போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட கடுமையான குரல் கொடுத்து எச்சரிக்கை விடுக்க வேண்டுமென்று அனைத்து கட்சி தலைவர்களின் இந்த கூட்டம் வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகின்றது.
மத்திய அரசு தன்னால் இயன்ற அளவுக்கு குரல் கொடுத்து வருகின்றது என்பதை தமிழகம் உணர்ந்த போதிலும், இலங்கை அரசு அதனை மதிக்காத நிலையில், இந்திய அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் மேலும் வேகத்தைக் காட்ட வேண்டுமென்று இந்த கூட்டம் வலியுறுத்துகின்றது.
இந்த தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்கள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, தலைமையில் டிசம்பர் 4-ந் தேதி டெல்லியில் பிரதமரை சந்திப்பதென்றும்- அதற்கிடையே நவம்பர் 28-ந் தேதி (நாளை மறுநாள்), தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்திப்பதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, நவ.26-
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் போரை நடத்துவதாக கூறி தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்.
இலங்கையில் போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க, சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம், காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடிந்தது.
இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய னியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
கூட்டத்தின் முடிவில், தமிழகத்தின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வருகிற 28-ந் தேதி பிரதமரை சந்தித்து இது பற்றி முறையிடுவது என்றும், அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில், சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள், பிரதமரை சந்திப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்திட, அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், 50 லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், இந்திய பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசை போர் நிறுத்தத்துக்கு இணங்க வைத்து, தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரே குரலாக இல்லாவிட்டாலும் தங்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தனித்தனியாகவும், ஒரு சிலர் இணைந்தும் போர்க் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து 23-4-2008-லும், 12-11-2008-லும், இரண்டு முறை தமிழ்நாடு சட்டப் பேரவையிலே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு முறையாக அனுப்பிவைத்திருக்கின்றோம். 14-10-2008 அன்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம்.
இதுவரை எங்கும் நடைபெறாத அளவுக்கு 24-10-2008-ல் வரலாறு காணாத மனிதச்சங்கிலி ஒன்றினை நடத்திக் காட்டியிருக்கின்றோம். தமிழகத்திலே உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும்- அரசியல் சார்பற்ற அமைப்புகளும் - ஆர்ப்பாட்டங்களையும், மறியல்களையும், ரெயில் நிறுத்தம் போன்ற போராட்டங்களையும் செய்து தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கின்றன.
திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், சின்னத் திரையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே பேரணி நடத்தி, உண்ணாவிரதம் நடத்தி இலங்கை தமிழரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார்கள்.
வாழ்வாதாரம் தேடி கடலுக்கு மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களின் துயரம் களையப்பட வேண்டுமென்றும், அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் செல்வது தவிர்க்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவதியுறும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பாகவும் நிவாரண உதவிகள் அனுப்புவதற்காக நிதி உதவி கோரி, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, விடுத்த வேண்டுகோளையேற்று இதுவரை 37 கோடி ரூபாய்க்கு மேல் நிதி, ஒரு மாதக் காலத்துக்குள்ளாகவே சேர்ந்துள்ளது.
நாம் எடுத்த இந்த முயற்சிகளின் பயனாகவும், மத்திய அரசு எடுத்துக் கொண்ட அக்கறையின் காரணமாகவும், போரினால் வீடு, வாசல்களை இழந்து சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு இடர் உதவிப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்க அமைப்புகளின் மூலமாகவும், இலங்கையிலே உள்ள இந்திய தூதுவர் வழியாகவும் நம்மால் அனுப்பி வைக்க முடிந்திருக்கின்றது. அதுபோலவே மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களை சுடக் கூடாது என்று உடன்பாடு காண முடிந்துள்ளது.
எனினும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும், உலகத் தமிழர்களும் நாளும் விரும்புகின்ற போர் நிறுத்தம் இலங்கையிலே இதுவரையிலே கைகூடவில்லை. நாம் கேட்டுக் கொண்டவாறு, போர் நிறுத்தம் செய்வதற்குத் தயார் என்று ஒரு தரப்பினர் அறிவித்த பிறகும், இலங்கை அரசு போரை நிறுத்த மாட்டேன் என்று அடம் பிடிப்பதோடு, இரண்டொரு நாட்களில் இலங்கை தமிழர்களையெல்லாம் கொன்றொழிப்பேன் என்று கண்ணை மூடிக் கொண்டு வெறித்தாக்குதல் நடத்தும் செய்தி அன்றாடம் ஏடுகளில் வந்து கொண்டிருக்கின்றது.
இலங்கை தமிழர்கள் பெரும்பகுதியினராக வாழ்கின்ற பகுதிகளை முற்றிலுமாகப் பிடிக்கும் வரை போரை நிறுத்தமாட்டோம் என்று இலங்கை சிங்கள அரசு தொடர்ந்து நடத்தி வரும் போரில்- பெருமளவில் அப்பாவித் தமிழர்களும், அவர்தம் குழந்தைகளும்தான் கொல்லப்படுகிறார்கள் என்றும், பெரும்பாலானோர் அகதிகளாக்கப்பட்டு அல்லல்படுகிறார்கள் என்றும் துயரச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பள்ளிகளுக்குச் செல்லும் வயதுடைய பல்லாயிரக்கணக்கான தமிழ் சிறார்கள் பல மாதங்களாக கல்விக் கூடங்களுக்கே செல்ல முடியாத நிலையில் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் தஞ்சம் புகுந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாலே போதுமென்று திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகள் நம்மைப் பொறுமையாக இருக்கவிடாத நிலையில் இனி என்ன செய்வதென்று யோசித்ததில்- மத்திய அரசு, இலங்கை அரசுடன் மேலும் மேலும் வேண்டுகோள் என்ற அளவில் நில்லாது, போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட கடுமையான குரல் கொடுத்து எச்சரிக்கை விடுக்க வேண்டுமென்று அனைத்து கட்சி தலைவர்களின் இந்த கூட்டம் வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகின்றது.
மத்திய அரசு தன்னால் இயன்ற அளவுக்கு குரல் கொடுத்து வருகின்றது என்பதை தமிழகம் உணர்ந்த போதிலும், இலங்கை அரசு அதனை மதிக்காத நிலையில், இந்திய அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் மேலும் வேகத்தைக் காட்ட வேண்டுமென்று இந்த கூட்டம் வலியுறுத்துகின்றது.
இந்த தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்கள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, தலைமையில் டிசம்பர் 4-ந் தேதி டெல்லியில் பிரதமரை சந்திப்பதென்றும்- அதற்கிடையே நவம்பர் 28-ந் தேதி (நாளை மறுநாள்), தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்திப்பதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment