Saturday, November 29, 2008

கருணாநிதி தலைமையிலான தமிழக குழுவுடன் டிசம்பர் 4-ல் சந்திப்பு பிரதமர் கடிதம்


சென்னை, நவ.30-
இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நேற்று (சனிக்கிழமை) எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து 25.11.2008 தேதியிட்டு முதல்-அமைச்சர் எழுதிய கடிதம் கிடைத்ததாகவும், 4.12.2008 அன்று காலை 10.15 மணி அளவில் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் வருகின்ற அனைத்து கட்சி தலைவர்களின் குழுவினை அவரது அலுவலகத்தில் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, தமிழக அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரச்சினை பற்றி 2.12.2008-ல் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதற்கான நேரம் காலையா, மாலையா என்பது பிரதமரின் அலுவலகத்திலிருந்து தெரிந்தவுடன் அறிவிக்கப்படும்.
மேற்கண்ட தகவல் அரசு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: