Saturday, November 22, 2008

28-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக கூடுதல் விமானம் இயக்கப்படுகிறது அரசு அறிவிப்பு




சென்னை, நவ.23-
புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக 28-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை ஏர்-இந்தியா நிறுவனம் கூடுதல் விமானங்களை இயக்குகிறது என்று அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர்-செயல்அலுவலர் கா.அலாவுதீன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசின் ஒதுக்கீடு, கூடுதல் ஒதுக்கீட்டின் கீழ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள புனிதப் பயணிகள் அனைவரும் சென்னையில் இருந்து ஜித்தா செல்வதற்கு 200 இருக்கைகள் கொண்ட கூடுதல் விமானங்களை ஏர்-இந்தியா நிறுவனம் 28-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை இயக்க உள்ளது. 28-ந் தேதி காலை 8.15 மணிக்கு ஏ1-2259 விமானம், 29-ந் தேதி காலை 8.05 மணிக்கு ஏ1-2261 விமானம், 30-ந் தேதி காலை 8.25 மணிக்கு ஏ1-2263 விமானம், டிசம்பர் 1-ந் தேதி காலை 8.05 மணிக்கு ஏ1-2265 விமானம் இயக்கப்படுகிறது.
மேற்கண்ட பயணத்திற்கான விமான ஒதுக்கீட்டினை மும்பையில் உள்ள மத்திய ஹஜ் குழு ஒதுக்குகிறது. இதன் விபரத்தை அதன் இணைய தளத்தில் காணலாம். புனிதப் பயணிகள் அனைவரும் சென்னை, சூளையில் அமைந்துள்ள தமிழ்நாடு பைத்துல் ஹுஜ்ஜாஜ், ஹஜ் இல்லம், எண்:3, டிமெல்லோஸ் சாலையில் இயங்கும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தற்காலிக அலுவலகத்தில், பயணம் மேற்கொள்ளும் இரண்டு நாட்களுக்கு முன்னர் புனிதப் பயணத்திற்கான பயண ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments: