Sunday, November 23, 2008

லண்டனில் தமிழ் எம்.பி.க்கள் கூட்டம்: வைகோவுக்கு `விசா' வழங்க இங்கிலாந்து தூதரகம் மறுப்பு


சென்னை, நவ.24-
லண்டன் செல்ல ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு `விசா' வழங்க இங்கிலாந்து தூதரகம் மறுத்துவிட்டது.

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில், தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் 26-ந் தேதி கூட்டம் ஒன்று நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் கலந்துகொள்ள வைகோவும் சம்மதம் தெரிவித்து இருந்தார். இதற்காக லண்டன் செல்ல அனுமதிக்கக்கோரி `பொடா' கோர்ட்டில் வைகோ மனு செய்திருந்தார்.
கோர்ட்டும் அவரது கோரிக்கையை ஏற்று லண்டன் செல்ல அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து வைகோ, சென்னையில் இருந்து லண்டன் செல்ல 24-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார்.

லண்டன் செல்ல `விசா' கேட்டு வைகோ, இங்கிலாந்து தூதரகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், இங்கிலாந்து தூதரகம் வைகோவுக்கு `விசா' வழங்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, வைகோ தனது லண்டன் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு `விசா' வழங்க அனுமதி மறுத்தது குறித்து, சென்னையில் உள்ள இலங்கிலாந்து தூதரக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
போலீசாரிடம் கேட்டபோது, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசி வருவதால், அவருக்கு `விசா' வழங்க இலங்கிலாந்து தூதரகம் மறுத்துவிட்டாக தெரிவித்தனர்.

No comments: