சென்னை, நவ.23-
விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்ற பிரபல தமிழ் நடிகரின் பெயரை தக்க ஆதாரத்துடன் விரைவில் நிரூபிப்பேன் என்று சுப்பிரமணியசுவாமி கூறினார்.
ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சுவான், இன்டெக் ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில் முறைகேடுகள் நடந்து உள்ளது.
இந்த முறைகேடு மூலம் மத்திய அரசுக்கு 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் நான் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக இல்லை. இலங்கை பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஒருவரும் பணம் பெற்றிருக்கிறார். இதற்கான ஆதாரத்தை திரட்டி வருகிறேன். விரைவில் அதை நான் நிரூபிப்பேன்.
இந்துக்களிடையே உள்ள ஒற்றுமையை குலைப்பதற்கு மத்திய அரசு சதி செய்து வருகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெறுவதற்காக காங்கிரஸ் நாடகம் ஆடி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்ற பிரபல தமிழ் நடிகரின் பெயரை தக்க ஆதாரத்துடன் விரைவில் நிரூபிப்பேன் என்று சுப்பிரமணியசுவாமி கூறினார்.
ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சுவான், இன்டெக் ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில் முறைகேடுகள் நடந்து உள்ளது.
இந்த முறைகேடு மூலம் மத்திய அரசுக்கு 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் நான் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக இல்லை. இலங்கை பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஒருவரும் பணம் பெற்றிருக்கிறார். இதற்கான ஆதாரத்தை திரட்டி வருகிறேன். விரைவில் அதை நான் நிரூபிப்பேன்.
இந்துக்களிடையே உள்ள ஒற்றுமையை குலைப்பதற்கு மத்திய அரசு சதி செய்து வருகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெறுவதற்காக காங்கிரஸ் நாடகம் ஆடி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment