Tuesday, December 30, 2008

காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி!.


புதுடில்லி :

காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தேசிய மாநாட்டுக் கட்சி 28 இடங்களை கைபற்றியது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இரு தினங்களுக்குப் பிறகு, இன்று காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து டில்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


டில்லியில் பிரதமர் இல்லத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை உமர் அப்துல்லா சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, காங்கிரஸ் ஒரு மனதாக, காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு அளித்து கூட்டணி ஆட்சி நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் உமர் அப்துல்லாவை‌ முதல்வராக ஏற்றுக்கொள்ளவும் சம்மதம் தெரிவித்துள்ளது.


ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் சைபுதீன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உமர் அப்துல்லா காஷ்மீருக்கு ஒரு நல்ல முதல்வராக இருப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

No comments: