Thursday, December 25, 2008

தோழியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்ட,சென்னை கல்லூரி மாணவர் கைது!.



மும்பை, டிச.26-

தன்னுடன் படித்த தோழியை ஆபாசமாக சித்தரித்து இன்டர்நெட்டில் படங்களை வெளியிட்ட சென்னை கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை பவாய் ஐ.ஐ.டி. கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருபவர் மாணவி கரீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய செல்போனுக்கு கடந்த ஆண்டு தொடர்ச்சியாக 3 நாட்கள் ஏராளமான அழைப்புகள் வந்தன.

அப்படி தொடர்பு கொண்டு பேசியவர்கள் மாணவியிடம் ஆபாசமாக பேசினர். ஒரு நாள் இரவுக்கு எவ்வளவு என்றும் கேட்டனர். அதனால் மாணவி கரீனா அதிர்ச்சி அடைந்தார். தன்னோடு பேசிய ஒருவர் சொன்ன தகவல்படி குறிப்பிட்ட இணையதளத்தை பார்த்தார். அதில் தன்னுடைய படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருப்பது கண்டு கரீனா மேலும் அதிர்ச்சி அடைந்தார்.


இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மாணவியின் படம் எந்த ஐ.பி.யில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை கண்டுபிடித்தனர். மாணவி கரீனாவின் ஆபாச படங்கள் அனைத்தும் ஒரே `இ-மெயில்' முகவரியில் இருந்து அனுப்பப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் அந்த முகவரியில் தொடர்பு கொண்டபோது, சென்னை கல்லூரியில் படிக்கும் மாணவர் சலீல் டோக்ரா என்பவருடையது என்று தெரிந்தது.

இதனையடுத்து மும்பை போலீசார் சலீலிடம் விசாரணை நடத்தியபோது தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனது இ-மெயிலை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்றும் கூறினார். பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். சென்னைக்கு விரைந்து வந்த மும்பை போலீசார் மாணவர் சலீலை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது கூறியதாவது:-

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் மாணவர் சலீல். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் கட்டிடக்கலை படிப்பு படித்து வருகிறார். மாணவி கரீனா பள்ளிப்பருவத்தில் சலீலுடன் படித்துள்ளார். அப்போது இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். அதன்பிறகு மேற்படிப்புக்காக கரீனா மும்பை சென்று விட்டார். ஆனால் மாணவர் சலீல் சென்னையில் படித்து வந்தார்.

இந்த நிலையில் கரீனாவை தனது தோழி என்றும் எண்ணாமல் அவருடைய படத்தை `இன்டர்நெட்'டில் ஆபாசமாக வெளியிட்டு, அவரது செல்போன் நம்பரையும் வெளியிட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர் சலீலை மும்பைக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: