Monday, December 22, 2008
"கிளிநொச்சி தாக்குதல் முறியடிப்பு" - விடுதலைப்புலிகள் ஆவேச போர்!.!!.
கொழும்பு, டிச.23-
விடுதலைப்புலிகளின் கோட்டையாக திகழும் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக, 5 முனைகளில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை குண்டு வீச்சு ஆதரவுடன் நடைபெற்றுவரும் இந்த தாக்குதலை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி ஆவேச போர் புரிந்து வருகிறார்கள்.
உத்திரபுரத்தில் இருந்து கிளிநொச்சி மற்றும் இரணைமேடு நோக்கி மேற்கொள்ளப்பட்ட இருமுனை தாக்குதல்களை விடுதலைப்புலிகள் நேற்று வெற்றிகரமாக முறியடித்து ராணுவத்தினரை விரட்டி அடித்தனர். இந்த போரில் 100 சிங்கள சிப்பாய்கள் பலியாகி உள்ளனர். 250 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற மூன்று முனைகளில் கடும் போர் நீடித்து வருகிறது.
ஏற்கனவே, கடந்த செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விடுதலைப்புலிகள் நடத்திய பதிலடி தாக்குதல்களில் 170 சிங்கள சிப்பாய்கள் பலியானதும், 250-க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் சமாதான செயலக இயக்குனர் எஸ்.புலித்தேவன் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment