Wednesday, December 24, 2008

இன்று கிறிஸ்துமஸ் ! இன்று கிறிஸ்துமஸ் !!.இன்று கிறிஸ்துமஸ் !!!.







கிறிஸ்து இயேசு உலகில் பிறப்பதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு
முன் ஆதாம் படைக்கப்பட்டான். அன்றிலிருந்து கடவுள் மனித
அவதாரமாக, குமாரனாக பிறக்கும் செய்தி பல்வேறு
தீர்க்கதரிசிகளுக்கு அறிவிக்கப்பட்டது. குறிப்பாக கிறிஸ்துவுக்கு
முன் கி.மு.700ல் இஸ்ரேலில் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி கூறியது:
"கடவுள், வானில் ஒரு அடை யாளத்தை காட்டுவார்(நட்சத்திரம்),
கன்னிகை கர்ப்பவதியாகி குமாரனை பெறுவாள்' (ஏசா.7:14) என்றார்.
மேலும் கி.மு.500ல் மீகா தீர்க்கதரிசி கூறியது: யூதேயாவிலுள்ள
பெத்லகமே, இஸ்ரவேலை ஆளப் போகிறவர் உன்னிடத்தில்
தோன்றுவார்'(மீகா.5:2)என்றார். கிறிஸ்து இயேசு யூத குலத்தில்
பிறப்பார் என்ற முன்னறிவிப்பால், இஸ்ரேலில் கடவுள் மகன்
தன்னிடத்தில் பிறப்பாரோ என, கன்னிப்பெண்கள் ஆவலுடன்
காத்திருந்தனர்.


எக்ஸ்மாஸ் ஆனது எப்படி?:
கிறிஸ்துமஸ் தினம்
டிசம்பர் 25 என முதன்முதலாக கி.பி.154ல் போப் ஜூலியசால்
அறிவிக்கப்பட்டது. கிறிஸ்து+மாஸ் என்ற சொல்லே கிறிஸ்துமஸ் ஆக
மாறியது. கிறிஸ்துமஸ் என்றால் "கிறிஸ்துவின் ஆராதனை' எனப்பொருள்.
சிலர் "எக்ஸ்மாஸ்' என அழைக்கின்றனர். "எக்ஸ்' என்ற எழுத்து
கிரேக்க சொல் ஆகும். எக்ஸ்மாஸ் என்று எழுதினாலும், கிறிஸ்துமஸ்
என்று தான் கூறவேண்டும். பிரெஞ்சு மொழியில் கிறிஸ்துமஸை "நோயஸ்'
என்கின்றனர். இங்கிலாந்தில் பண்டைக்காலத்தில் டிச.25ம் தேதியே
ஆண்டின் முதல் நாளாக கொண்டாடினர்.இதன் காரணமாக டிச.,25ல்
கிறிஸ்துமஸ் பண்டிகையை நடத்தினர் என சில சரித்திர குறிப்புகள்
தெரிவிக்கிறது.

ஏழ்மை பிறப்பு:

வானம் எனக்கு சிங்காசனம்,
பூமி எனக்கு பாதபடி என்ற கடவுள் (ஏசா.66:1) தன்னை முற்றிலுமாக
தாழ்த்தி, கடவுளின் மகனென்று, ஏழைக்கோலம் எடுத்தார். கன்னிப்பெண்
மரியாளுக்கு கணவனாக யோசேப்பு நிச்சயமான நேரத்தில் மரியாள்
கர்ப்பமானார். இந்நிலையில் யோசேப்பு, ரகசியமாக மரியாளை தள்ளிவிட
நினைத்தார். அப்போது தேவதூதர், "மரியாளிடத்தில் உற்பவித்தது
பரிசுத்த ஆவியால் உண்டானது'(மத்.1:20)என்றார். யோசேப்பு தேவதூதர்
வாக்கை நம்பி, குழந்தையை பெற்றெடுக்கும் வரை நிச்சயிக்கப்பட்ட
மனைவியான மரியாளுக்கு துணையாக இருந்தார். இஸ்ரேலில் யூதேயாதேசம்
பெத்லகேமிலுள்ள மாட்டுத்தொழுவில் இயேசு பாலகனாக பிறந்தார்.
உலகில் முதன் முறையாக தோன்றிய நட்சத்திரத்தை கண்ட ஞானிகள்
எருசலேமுக்கு வந்து, கிறிஸ்துவை பணிந்து
கொண்டார்கள்.

இயேசு பிறந்த இடத்தில் சர்ச்:

இயேசு
கிறிஸ்து இஸ்ரேல் நாட்டிலுள்ள பெத்லகேமில் மாட்டுதொழுவத்தில்
பிறந்தார். இங்கு ஏராளமான சர்ச்சுகள் இருப்பினும், பிறந்த இடமான
தொழுவத்தின் மீது கட்டப் பட்ட "சர்ச் ஆப் நேட்டிவிட்டி'
மிகப்பெரிதாக விளங்குகிறது. கிறிஸ்து மீது அன்பு கொண்டவர்கள்
வாழ்வில் ஒருமுறையா வது இங்கு செல்ல துடிக்கின்றனர்.


பைபிள்-விளக்கம்:

உலக வரலாறு மற்றும்
இயேசுவின் வாழ்க்கையை விளக்கும் "பைபிள்' பிப்லியா என்ற கிரேக்க
வார்த்தையால் ஆனது. இதற்கு "புத்தகம்' அல்லது "பத்திரம்'
எனப்பொருள். கி.பி.370 வரை பழைய ஏற்பாட்டை "பிப்லியா' என்றும்,
பின்பு பழைய, புதிய ஏற்பாடுகளை "பைபிள்' எனவும் கூறினர்.
2ஆயிரத்து 453 மொழிகளில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது. 1969ல்
சந்திரனுக்கு மைக்ரோ பிலிம் ஆக எடுத்து செல்லப்பட்டது. உலகில்
முதன் முதலாக எழுதப்பட்ட பைபிளின் பிரதி ஒன்று அமெரிக்கா
நியூயார்க்கில் உள்ளது.

கிறிஸ்துவின் நோக்கம்:

ஜாதி, மத
வேறுபாடின்றி ஒரே குலமாக(குடும்பம்) சந்தோஷம், சமாதானத்துடன்,
பாவத்தை வெறுத்து வாழவேண்டும் என்ற நற்செய்தியே கிறிஸ்துமஸ்
ஆகும். முதல் கிறிஸ்துமஸ் மரம்: இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் மரம்
அறிமுகமாகும் முன்பே, ஜெர்மனி, ஆஸ்திரியா உட்பட ஐரோப்பிய
நாடுகளில் "பிர்' என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது.
1841ல் இங்கிலாந்து நாட்டவர், மரங்களில் இலைகள், மலர்களை கட்டி
அலங்கரிக்க துவங்கினர். அரசர் அல்பெர்டினால் முதலாவதாக வின்ட்சர்
என்ற கோட்டையில் கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார்.


வரலாற்றில் மைய நாயகன் கிறிஸ்து:

உலகில்
எகிப்து, பாபிலோன், மேதியா, பாரசீகம், கிரேக்கம், ரோம பேரரசுகள்
ஆட்சி செய்தன. ரோமப் பேரரசு கி.பி.,476ல் வீழ்ச்சியடையும் வரை
ஆட்சி புரிந்தது. இச்சமயம் இயேசு பிறந்தது முதல் 34 வயது வரை
கொடும் துன்பத்துக்கு ஆளானார். அவரை பின்பற்றிய கிறிஸ்தவர்களும்
துன்புறுத்தப்பட்டனர். பின்பு 313ல் கான்ஸ்டன்டைன் பேரரசர்
கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொண்டார். ரோம அரசு கிறிஸ்துவின்
பிறப்பு ஆண்டை மையமாக வைத்து உலக வரலாற்றை கிறிஸ்துவுக்கு
பின்-(கி.மு.), கிறிஸ்துவுக்கு பின்(கி.பி.)என்று
பிரித்தனர்.


முதல் கிறிஸ்துமஸ் குடில்:

இயேசு கிறிஸ்து
பிறந்ததை போல் சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமான
அலங்காரங்களுடன் உலகமெங்கும் அமைக்கப்படுகின்றன. இங்கிலாந்தில்
1722ல் புனித பிரான்சிஸ் முதன்முறையாக கிறிஸ்துமஸ் குடிலை
அறிமுகப்படுத்தினார்.


பூமிக்கு வந்த தேவமைந்தன்: "கிறிஸ்து+மாஸ்'

கிறிஸ்துவின் ஆராதனை "கிறிஸ்துமஸ்' ஆனது. கிறிஸ்து என்றால்
மேசியா அல்லது தீர்க்கதரிசி எனப்படும். இயேசு என்றால் ரட்சகர்,
விடுவிப்பவர் அர்த்த மாகும். ஆதியும் அந்தமும், துவக்கமும்,
முடிவில்லாத கடவுள், தானே குழந்தையாக மனுக்குலத்திற்கு, தன்னை
வெளிப்படுத்த விரும்பி, மேசியாவாக உலகில் தோன்றினார். உலக வரலாறு
ஆண்டு கணக்கிலும் நடு மைய நாயகனாக கி.மு., கி.பி.,யாக
திகழ்கிறார்.
"சாண்டா கிளாஸ்' கிறிஸ்துமஸ் தாத்தா:

"கிறிஸ்துமஸ்' வந்தாலே சாண்டாகிளாஸ் தாத்தாவை மறப்பதில்லை.
கி.பி.4ம் நூற்றாண்டில் பின்லாந்து நாட்டில் வசித்த
பெரும்பணக்காரர் பிஷப் செயின்ட் நிக்கோலசை, சாண்டா கிளாஸ்
தாத்தாவாக கருதுகின்றனர்.


முதல் வாழ்த்து அட்டை:

இங்கிலாந்தில் 1843ல் கார்ஸ்லே முதல்முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை தயாரித்து, தன் நண்பர் ஹென்றி ஹோலோவுக்கு அனுப்பினார். தொடர்ந்து இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் மற்றவர்களுக்கு அனுப்ப துவங்கினர். அமெரிக்காவில் தற்போது வாழ்த்து அட்டைக்காக 25 கோடி டாலர் வரை செலவளிக்கின்றனர்.

No comments: