Monday, December 8, 2008

5 மாநில தேர்தல் முடிவு; சமூகநீதியும், மதச்சார்பின்மையும் வென்றன கி.வீரமணி அறிக்கை


சென்னை, டிச.9-
திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
5 மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 3 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 10 ஆண்டுகளாக பா.ஜ.க. வசமிருந்த ராஜஸ்தானை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்சிகளும் சம நிலையில் உள்ளன. பா.ஜ.க. மத்திய பிரதேசம் ஒன்றில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது.
விலைவாசி ஏற்றம், மும்பையில் தீவிரவாத தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்களுக்கிடையே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது, மக்கள் காங்கிரசுக்கு ஆதரவளிக்கின்றனர் என்பதும் பா.ஜ.க.வை நிராகரித்துவிட்டனர் என்பதும் தெரியவருகிறது. இந்த வெற்றி, சோனியாகாந்திக்கு பிறந்த நாள் பரிசாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: