Monday, December 29, 2008

திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானின் குடும்பத்தினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்!. (?).


சென்னை, டிச.30-

திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானின் குடும்பத்தினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் லதா அதியமான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் லதா அதியமானின் மாமியார் தெய்வானையம்மாள், நாத்தனார் நளினா, கொழுந்தனார்கள் ரவி, கண்ணன், அவருடைய மனைவி வானதி ஆகியோர் நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானுடைய மாமியார் தெய்வானையம்மாள், நாத்தனார் அ.நளினா, கொழுந்தனார்கள் ரவி, கண்ணன், அவருடைய மனைவி வானதி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். அப்போது இவரது குடும்பத்தை சேர்ந்த கீர்த்தனா, பூரணசந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரவேற்று அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் கார்டை வழங்கினார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: