Wednesday, December 24, 2008

மும்பை தாக்குதலில் பாக்., ராணுவத்துக்கு தொடர்பு : அமெரிக்கா தகவல்






மும்பை :

மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்பு உண்டு என அமெரிக்க உளவு நிறுவனம் எப்.பி.,ஐ., உறுதி பட தெரிவித்துள்ளது .

அமெரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ., யின் சிறப்பு குழு மும்பை தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்தியா வந்தது. இந்த குழுவினர் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் இடமும் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் தங்களது புலனாய்வு முடிந்து விட்டதாகவும், அதன்படி மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நிச்சயமாக தொடர்பு உண்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர் .

பாகிஸ்தான் ராணுவமும் இந்த தாக்குதல் சம்பவத்தில் மறைமுகமாக ஈடுபட்டிருக்கலாம் என்பதை மறுக்க முடி‌யாது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

No comments: