Wednesday, December 24, 2008

நடிகை பாரதி மீது அவரது மானேஜர் கொடுத்த புகார் பொய்யானதா?.


சென்னை, டிச. 25:
நடிகை பாரதி மீது அவரது மானேஜர் கொடுத்த புகார் பொய்யானதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

"அம்முவாகிய நான்", "நெஞ்சத்தை கிள்ளாதே", "சற்று முன் கிடைத்த தகவல்" ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாரதி.

இவரது மானேஜர் வேல்ராஜா. இவர், சென்னை வளசரவாக்கம் போலீசில் அளித்துள்ள புகாரில், "சினிமா பைனான்சியர் தணிகைவேலுவிடம் எனது திருமணத்துக்கு ரூ.75 ஆயிரம் கடன் வாங்கினேன்.
நடிகை பாரதி அழைப்பதாக ஒரு நாள் காரில் என்னை தணிகைவேல் அழைத்து சென்றார்.

பாரதியின் வீட்டில் இருந்த 5 பேர் என்னை தாக்கினர்" என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து தணிகைவேலிடம் போலீசார் விசாரித்தபோது, "கடனை திருப்பிக் கேட்டேன். அதனால் என் மீதும், நடிகை பாரதி மீதும் வேல்ராஜா பொய்ப் புகார் கொடுத்துள்ளார்" என்று சொன்னார்.

நடிகை பாரதி வெளியூரில் இருப்பதால், அவரிடம் போலீசார் இதுவரை விசாரிக்கவில்லை.

இதற்கிடையே, வேல்ராஜா புகாரில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதில் போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடனை திருப்பிக் கேட்டதற்காக அவர் பொய் புகார் கொடுத்திருக்காலாமோ என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடக்கிறது.

No comments: