Friday, December 12, 2008

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது அமைச்சர் கில் வலியுறுத்தல்




புதுடெல்லி, டிச. 13:


இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடக் கூடாது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் நேற்று வலியுறுத்தினார்.
ஜனவரியில் பாகிஸ்தான் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. மும்பையில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளதால்,
இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் கேள்விக் குறியாகி உள்ளது.
இந்நிலையில், அமைச்சர் கில் இது குறித்து நேற்று கூறுகையில், ‘பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்தி பல உயிர்களைக் கொடூரமாக கொன்றுள்ளனர்.
இந்த சமயத்தில், இந்திய கிரிக்கெட் அணி அங்கு சென்று விளையாடுவது சரியாக இருக்காது. எனினும், இது குறித்து மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்.

No comments: