Saturday, December 20, 2008

சர்வதேச பேட்மின்டன் சாய்னா போராடி தோல்வி!.






கோலாலம்பூர், டிச. 21:
மலேசியாவில் நடக்கும் "சூப்பர் சீரீஸ் மாஸ்டர்ஸ் பைனல்" போட்டியின் அரைஇறுதியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் தோல்வியுற்றார்.

நேற்று நடந்த அரைஇறுதிப் போட்டியில் சாய்னா, 6ம் நிலை வீராங்கனை சென் வாங்கை (ஹாங்காங்) எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் 15&21, 21&14, 16&21 என்ற செட் கணக்கில் சாய்னா தோல்வியுற்றார்.

எனினும், உலக சீரீஸ் போட்டியின் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

உலகின் 10வது நிலை வீராங்கனையான சாய்னா (18) நேற்று முன்தினம் பிரான்சின் ஹாங்கியான் பி (4வது நிலை), மியு சுவாங் (மலேசியா) இருவரையும் வீழ்த்தி

அரைஇறுதிக்கு முன்னேறினார். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கால்இறுதி வரை முன்னேறிய சாய்னா, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மலேசியா மற்றும் கொரியாவில் நடக்க உள்ள "சூப்பர் சீரீஸ்" போட்டியில் பங்கேற்க உள்ளார்.

No comments: