Friday, December 19, 2008

கிளிநொச்சி, முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் நிலை மீது குண்டு வீச்சு !.







கொழும்பு, டிச.20-

விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களை கைப்பற்ற, இலங்கை ராணுவம் பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு உதவியாக, இலங்கை விமானப்படை போர் விமானங்களும், மி-24 ரக ஹெலிகாப்டர்களும், விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது நேற்று குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின.

குறிப்பாக, கிளிநொச்சி அருகே இரணமடு சந்திப்பு பகுதியிலும், முல்லைத்தீவு அருகே முல்லையவெளியிலும் உள்ள விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு அரண்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. கிளாலி பகுதியில் சென்ற விடுதலைப்புலிகளின் படகுகள் மீது மி-24 ரக ஹெலிகாப்டர்கள் குண்டுகளை வீசின. இத்தாக்குதல்களில் ஏற்பட்ட சேதம் பற்றி அறிவிக்கப்படவில்லை.

No comments: